Category Archives: பிரதி மீது

தேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்!

பெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது என்று உற்றுப்பார்த்தால் அவளின் தாயாகவும் அவனைச் சார்ந்த பெண்களாகவும் இருப்பார்கள். பொதுவாக அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு மிகயியல்பானது. ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமானதும் அந்தரங்கமானதுமாக இருந்துவிடுவதுண்டு. ஆண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும், பெண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும் என்பதை மென்மையாகவும் கடுமையாகவும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதில் பெரும்பங்கை செலவழிப்பதது… Read More »

கொல்வதெழுதல் 90 – அலைக்கழிப்பின் நாட்கள்

கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஆர்.எம்.நெளஸாத் எழுதிய புதினம் ‘கொல்வதெழுதல் 90’. போர்க்காலத்தில் சாதாரண கிராமத்து இசுலாமிய இளைஞன் ஒருவனின் கதை. தொண்ணூறுகளில் கதை நிகழ்கின்றது. நாலா பக்கமும் இடம்பெறும் இன முரண்பாடுகள், மிகச்சிறிய சமூகமான இசுலாமிய சமூகத்தை அழுத்திப்பிசைகிறது. இலங்கையில் வசிக்கும் இசுலாமிய சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகளையும், அச்சமூகத்தின் கடந்தகால வரலாறுகளையும் இலக்கியப் பதிவாக எழுதப்படுவதில்லை என்ற பரிதவிப்பு இசுலாமிய சமூகத்துக்கு தொடர்ச்சியாக இருந்துவருவதுண்டு. அப்பரிதவிப்பை ஓரளவுக்கு குறைத்துவைத்திருக்கின்ற படைப்பாக்கமாக கொல்வதெழுதல் 90 நாவலைக் கருதலாம். கிழக்கிலங்கையிலிருக்கும் பள்ளிமுனைக்கிராமம்தான்… Read More »

மூன்றாம் நதி

தொடர்ச்சியாக இணையத்தில் வாசிப்பவர்களுக்கு வா.மணிகண்டனை தெரியாமல் இருப்பது ஆச்சர்யமிக்கதொன்றாகவே இருக்கும். நிசப்தம் வலைத்தளத்தில் சளைக்காமல் எழுதிக்கொண்டு இருப்பவர். அதே நேரத்தில் நிசப்தம் அறக்கட்டளை மூலம் எண்ணற்ற உதவிகளைத் தேவையானவர்களுக்குச் செய்துகொண்டிருப்பவர். தினமும் வலைத்தளத்தில் எழுதுவதற்கு அவருக்கு விடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். எப்படி எழுத்துப்பிழைகள் இல்லாமல் வேகவேகமாகத் தட்டச்சு செய்யது இணையத்தில் தினமும் இரண்டு மூன்று கட்டுரை என்று எழுத முடிகிறது என்று ஆர்ச்சர்யமகவே இருக்கும். கவிதைகள் எழுதுவதிலும் கவிதைகளுக்கு மதிப்பீடு எழுதுவதிலும் நிறையப் பக்கங்களைச் செலவழித்தவர். இவரது… Read More »

குடை நிழல்

தி ஹிந்து நாளிதழில் மண்குதிரை எழுதிய “குடை நிழல்” குறுநாவலின் மதிப்பீட்டை வாசித்துவிட்டு, அக்குறுநாவலை மிகச்சமீபத்தில்தான் வாசித்தேன். தெளிவத்தை ஜோசப் மிகமுக்கிய கதை சொல்லி என்பதில் சந்தேகமேயில்லை. மிக நேரடியான மொழியில் சொல்லிவிட்டுச் செல்லும் சம்பவ சித்தரிப்புகள். இத்தனை நேரடியான யதார்த்தவாத சித்தரிப்பு தேவையா என்றால் அதுவே இக்குறுநாவலின் அழகியலாகவும் பலமாகவும் இருந்துவிடுகின்றது. கைது விசாரணைகள் என்று வரும்போது நாயகனுக்கு நேரும் அனுபவத்தைவிட அவன் கேள்விப்பட்ட அனுபவம்தான் இம்சிக்க வைகின்றது. எத்தனை எளிமையாக ஒருவனை வீழ்த்த முடிகின்றது.… Read More »

பஞ்சபூதம்

பஞ்சபூதம் வெறும் 32 பக்கங்களில் சாஜித்தினால் எழுதப்பட்ட நாவல். இலங்கை தமிழ் இலக்கியப்பரப்பிலிருந்து வெளியாகும் நாவல்களின் வழமையான மரபார்ந்த கதையாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்கம் பஞ்சபூதம். சர்ரியலிசத் தன்மைக்கான கூறுகளை அதிகம் கொண்டிருக்கின்றது. இவ்வாறான வடிவ பரிசோதனைகள் இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் ஓரளவுக்கு ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டிருந்தாலும், நான் வாசித்தவரையில் யதார்த்தவாதத்திலிருந்து மீறி சர்ரியலிசமும் மேஜிக்கல் ரியலிசத்தின் கூறுகளையும் ஒருங்கே கொண்டு நாவல் வடிவில் எழுதப்பட்டதில் இதுவே இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் முதலாவதாக இருக்கவேண்டும். ஆழமான நித்திரையில்… Read More »

சிங்கிஸ் ஜத்மாத்தவ்வின் ஜமீலா – குறுநாவல்

ஜமீலா என்ற சோவியத் குறுநாவலை சமீபத்தில் கிடைத்த இடைவெளியில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் பல்வேறு கேள்விகளை மனதின் அடியாழத்தில் கொந்தளிக்க வைத்தவாரிருக்கின்றது. ஒழுக்க மீறல்கள் எகச்கமாக எமது பண்பாட்டில் நிகழும்போதும், அதனைக் கேள்வியுறும்போதும் ஏற்படும் மெல்லிய அதிர்ச்சிகள் அதிகம் எம்மை யோசிக்கவைப்பதில்லை. நாம் வகுத்துக்கொண்ட அறம், கூட்டுச்சமூகத்தில் சிலரால் மீறப்படும்போது அதற்கான காரணக் காரணியங்களைத் தகுந்த உளவியலோடு அணுகமுடிவதில்லை. வெறுப்பை அவர்கள் மேல் உமிழ்திவிட்டு நகர்ந்துவிடுகின்றது மனம். சமூகத்தில் அறம் தவறியவர்களாகக் கருதுபவர்களின் அவர்பக்க நியாயங்களை அவர்பக்கத்தில்… Read More »

பஷீரின் மதில்கள்

மலையாள எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவரான வைக்கம் முகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் நீண்ட காலம் தேடியது. மிகச் சமீபத்தில்தான் வாசிக்கக் கிடைத்தது. பொதுவாகவே மிகக்சிறிய பக்க எண்ணிக்கையைக் கொண்ட கதைகளை எழுதுவது பஷீரின் வழமை. மதில்கள் நாவல் வெறும் 39 பக்கங்களில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது. காலச்சுவட்டில் பஷீரின் படைப்புகள் அனைத்தும் குளச்சல் மு. யூசுப்பின் மொழிபெயர்ப்பில் தொடர்ச்சியாக வெளிவந்தது. ஆனால், மதில்கள் நாவலை சுகுமாரன் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ஏற்கனவே மதில்கள் நாவலை தமிழில் சுராவும்(சுந்தர ராமசாமி அல்ல)… Read More »

ஆதிரை – ஒரு பக்கப் பெண்களின் கண்ணீர்

ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரக்ஞை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும் மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க கதை சொல்லலாக சொல்வதிலே அதிகமான தரப்பினரிடம்… Read More »