Category Archives: திரைப்படம்

Give it to Angkar

இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோரா நாவலில் அர்த்தம் நிரம்பியதாக ஒரு கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான… Read More »

நியோகா

நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »

இரண்டு திரைப்படங்கள்

பஷன் – 2008 : பாவனைகளின் உலகம் பண்டங்களை மேலும்மேலும் விற்பதற்குச் செய்யும் விளம்பரங்களின் பின்பே இருக்கும் உழைப்பு மலைக்க வைக்கக்கூடியது. அழகு கூட ஒரு பண்டம்தான். அழகின் மேல் கட்டப்படும் அன்பும் ஒரு பண்டம்தான். பஷன் திரைப்படம் பாவனைகளுக்குப் பின்பே இருக்கும் அரசியலைப் பேசுகின்றது. உடல் மொழியிலிருந்து வெளிப்படுத்தும் உணர்வுகள் வரை செயற்கையாக வெளிப்படும் போலிப் பாவனைகள் எப்போதும் செயற்கையான பிளாஸ்டிக் சந்தோஷ உலகத்தைத் துருத்திக்கொண்டு காட்டும், மகிழ்ச்சியும் கருணையும் நிரம்பிய தேசமாகக் காட்டும். ஆனால்,… Read More »

பட்ட விரட்டி – மீள்தலின் தத்தளிப்பு

குற்றவுணர்வுகளில் வீழ்வதும் அதிலிருந்து வெளியேறத் தவிப்பதும் மனித வாழ்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால், சுற்றிப்பிடிக்கும் குற்றவுணர்வுகளின் வீரியத்திற்கு ஏற்ப அதன் பாதிப்புகள் தொடரலாம். எனினும் குற்றவுணர்வு பிடிக்கப்பட்டவரின் மனதின் பலவீனம் அதன் விளிம்பு எல்லைகளை மாற்ற முயலலாம். சிறிய தவறுகளுக்குக்கூட அதிகம் வருந்தலாம். சிலர் பெரிய அநீதிகளுக்குக் கொஞ்சம் வருந்தலாம். சிலர் இறுதிக்காலங்களில் பலதை நினைத்து அதிகம் வருந்தலாம். அது தனிமனிதக் குணம் சார்ந்தது. செயலின்மையின் முடிவற்ற எல்லையில் நின்று தத்தளித்து வெளியேறிய பின் ஏற்படும் குற்றவுணர்வுகளில்… Read More »

Blue Is the Warmest Colour – அன்பு பால் நிலை கடந்தது

உடல் உறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது ஆண்-பெண் என்ற இரு பாலினத்திற்கு உரித்தான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தாலும், இன்று உடலுறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது பால் நிலை கடந்ததாகவே பார்க்கப்படுகின்றது. அதாவது உடல் உறவு சார்ந்த உறவு என்பது பால் நிலை(Gender) கடந்ததாகவுள்ளது. ஆணோ அல்லது பெண்ணோ தனக்குப் பிடித்த ஆணுடனோ, பெண்ணுடனோ, திருநங்கையுடனோ,திருநம்பியுடனோ உடலுறவு வைத்துக் கொள்வதுடன் சேர்ந்தும் வாழலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மேலைத்தேய நாடுகளில் உருவாகிவருவதுடன், அதனை ஒட்டிய விவாதங்கள் கீழைத்தேய நாட்டில்… Read More »

“அவள் அப்படித்தான்” திரைப்படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்.

“அவள் அப்படித்தான்” திரைப்படம் நேற்று(06.05.2017) நிகழ்படம் நிகழ்வில் திரையிடப்பட்டது. பார்க்க வேண்டிய திரைப்படப் பட்டியலில் வைத்திருந்த இப்படத்தை ஒருவகையாகப் பார்த்தாகிவிட்டது. நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளுக்குச் சிந்தனை வடிவில்,எழுத்து வடிவில் முன்வைக்கப்படும் தீர்வுகளுக்கு அல்லது சிந்தனை முறைகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் விரிவாக உரையாடப்பட வேண்டியவை. அப்படியாகச் செயல்வடிவம் கொடுக்கும்போது ஏற்படும் தடங்கல்கள் பற்றிய சிந்தனையைக் கிளறி கடுமையாக யோசிக்க வைத்த திரைப்படமாக இருக்கின்றது ‘அவள் அப்படித்தான்’. ஸ்ரீ பிரியா, கமல்ஹாசன்,ரஜினிகாந்த் இணைந்து ருத்ரைய்யாவின் நெறியாள்கையில்… Read More »

அடர் பனிக் குளிரின் பயங்கரம் – எவரெஸ்ட்

திரையனுபவம் நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையுச்சிக்குப் பயணிக்கும் பயணிகளின் உணர்வுபூர்வமான கதையினைக்கொண்ட ஆங்கிலக் கதைப்படம் எவரெஸ்ட். 1996 – இல் நடந்த திகிலூட்டக்கூடிய விபத்து ஒன்றின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படமாகப் படமாக்கியுள்ளார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வந்திறங்கியிருக்கும் குழுவின் அறிமுகத்தோடு திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் சிநேகமாக அறிமுகமாகிக் கொள்கிறார்கள். மிக உயரமாக எழுந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தை திறந்த விழிகளுடன், பரவசமாகப் பார்கிறார்கள். சில்லென்று குளிர் காற்று சீண்டுகின்றது. திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும்… Read More »

தாரே ஸமீன் பார்

விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சில படங்கள் மட்டுமே அதிஷ்டவசமாகப் பார்கக் கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான், 2007 இல் வெளிவந்த தாரே ஸமீன் பார். அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூகச் செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இப்படத்தின் குறுவட்டு கைக்குவந்தபோது எந்த நம்பிக்கையும் இன்றி – முன் எடுகோள்கள் எதுவும் இன்றி – பார்க்கத் தொடங்கினேன். வசதியான பொருளாதார நிலையினைக் கொண்ட குடும்பத்தில் – அப்பா,அம்மா,அண்ணாவோடு… Read More »

சிறுவர்களுக்கான திரைப்படங்களும் மியாசகியும்

சிறுவர் சினிமா என்றால் சிறுவர்கள் நடிக்கும் சினிமா என்ற அபிப்பிராயம் நம்மில் பலருக்கு இருகின்றது. அது தவறான புரிதல். சிறுவர் சிறுவர்களுக்குரிய சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவை சிறுவர்களின் கனவுகளையும், கற்பனைகளையும் காட்சிப்படுத்தி அதன் வழியே அவர்களின் உலகம் எப்படித் தென்படுகிறது என்பதை வெளிப்படுத்தவேண்டும். சிறுவர்கள் உலகை புறவயமாகவும் அகவயமாகவும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், தங்களது ஆசைகள் அபிலாஷைகள் எவ்வாறு பெரியவர்களால் பாதிப்படைய வைக்கப்படுகின்றது என்பதை அவை தெளிவாக ஒப்பேற்ற வேண்டும். அவையே சிறுவர்… Read More »