Monthly Archives: July 2017

மெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16

அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »

மதிப்பீடு – திருக்கோவில் கவியுகன் – 15

இருத்தலின் மீதான வெறுப்பு, வாழ்தலின் மீதான வெறுப்பு போன்றவை அகம் நோக்கிய சிந்தனையில் உதிப்பதாக இருக்கலாம். அது தன்னுடையை தனிப்பட்ட வாழ்வின் மீதான போக்கு அல்லது மற்றவர்களின் வாழ்கையின் துன்பத்தை அவதானிக்கும்போது வாழ்வின் பிடிப்பு மீது தோன்றும் வெறுப்புணர்வாக இருக்கும். இது ஏன் சிலருக்கு அதிகமாகத் தோன்றுகின்றது, சிலருக்குத் தோன்றுவதேயில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இதை உணர்ந்து இருப்பதே மெய்யாக இருக்கும். கடைசி மெல்லிய ஏக்கத்துடன் இவ்வகையான உணர்வுளைக் கடந்திருப்போம்.… Read More »

மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14

பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத்… Read More »