Category Archives: ஈழத்து இலக்கிய முன்னோடிகள்

அஞ்சலி: தெளிவத்தை ஜோசப் (1934–2022)

தெளிவத்தை ஜோசப் அவர்களைக் குளிர் நிரம்பி வீசிய பின்னேரப் பொழுதொன்றில் மலையகத்தில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பில் முதன்முதலாகச் சந்தித்திருந்தேன். தன் வெண்ணிறத் தலைமுடியைச் சீராக அழுத்தி வாரி, கன்னங்களைச் சவரம் செய்து, மீசையைக் கச்சிதமாக நறுக்கிவிட்டுச் சட்டையை உட்செலுத்திய நேர்த்தியான தோற்றத்தில் சுறுசுறுப்பாகப் பேசியவாறு இருந்தார். அன்றைய நாளில் அவர் தலைமைதாங்கிய அரங்கில் உரையாற்றச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. முன்னர், அவர் எழுதிய ‘குடைநிழல்’ குறுநாவலை வாசித்துவிட்டு விரிவான குறிப்பொன்று எழுதியிருந்தேன்; அதையொட்டி அவருடன் தொலைபேசியில் பேசவும் இயன்றது.… Read More »

ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில்… Read More »

பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்

1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும். புகலிட இலக்கியம் என்றால் என்ன? எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில்… Read More »

தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17

எனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »

மெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16

அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »

மதிப்பீடு – திருக்கோவில் கவியுகன் – 15

இருத்தலின் மீதான வெறுப்பு, வாழ்தலின் மீதான வெறுப்பு போன்றவை அகம் நோக்கிய சிந்தனையில் உதிப்பதாக இருக்கலாம். அது தன்னுடையை தனிப்பட்ட வாழ்வின் மீதான போக்கு அல்லது மற்றவர்களின் வாழ்கையின் துன்பத்தை அவதானிக்கும்போது வாழ்வின் பிடிப்பு மீது தோன்றும் வெறுப்புணர்வாக இருக்கும். இது ஏன் சிலருக்கு அதிகமாகத் தோன்றுகின்றது, சிலருக்குத் தோன்றுவதேயில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இதை உணர்ந்து இருப்பதே மெய்யாக இருக்கும். கடைசி மெல்லிய ஏக்கத்துடன் இவ்வகையான உணர்வுளைக் கடந்திருப்போம்.… Read More »

மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14

பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத்… Read More »

ஆண்மை – எஸ்.பொன்னுத்துரை – 13

எஸ்.பொவின் படைபுகலம் அகம் சார்ந்த நெருக்கடிகளைப் புறவயமான சித்தரிப்புகளுடன் சித்தரிப்பவை. காமம் சார்ந்த மன நுண்ணடுக்குகளில் ஒளிந்திருக்கும் அடியாழப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதுவதிலே எஸ்.பொ முனைப்பாக இருந்தார். தனிமனித பிரச்சினைகளும், அகச் சிக்கல்களுக்குமே பிரதான இடத்தைக் கொடுத்தார். இயல்பாக உயிரினங்களுக்கு இருக்கக்கூடிய காமத்தையும், அதனை மீறும் தருணங்களையும் கண்டு, மனித மனதை இயல்பாகவே ஒப்புவித்தார். காம உணர்வுகள் சார்ந்த குற்றவுணர்ச்சிகள் அவரின் படைப்புகளில் இருப்பதில்லை. அவரது கதைகளில் சித்தரிக்கப்படும் யாழ்ப்பாணத்து நிலம் என்பது, மிகுந்த நுண்மையான சித்தரிப்புக்களால்… Read More »

மீன்கள் – தெளிவத்தை ஜோசப் – 12

நாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும் அதுதான். பெரிய மீன் சின்ன மீனை உண்டு உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை போட்டிகொண்ட அவசரசகதி வாழ்வில் உருவாகிவருகிறது. உயிர்வாழ்தலின் போராட்டம் அத்தகைய உக்கிரம் கொண்டது. தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கும் சிறுகதைகளில் முதன்மையான சிறுகதை “மீன்கள்”.… Read More »

ஒரு பகற்பொழுது – நந்தினி சேவியர் – 11

உணவு,உடை,உறையுள் மூன்றும்தான் மனித வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது. இது தனியே மனிதர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றில்லை, மிருகங்களுக்கும் இதே உணவு,உறையுள் தான் உயிர்வாழத் தேவைப்படுகின்றன. அப்போது மனிதர்களுக்கும், மிருகத்துக்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகம் வரும் அல்லவா; மனிதர்கள் இதிலிருந்து நுண்மையாக வேறுபடுகிறார்கள். அன்பும் கருணையும், அறிதலும் தான் மிருகங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. உயிர்வாழ்வதையும் தாண்டி ஏதோவொன்று வாழ்கையில் இருக்கின்றது அல்லவா. நந்தினி சேவியர் எழுதிய சிறுகதையில் ஒன்று ‘ஒரு பகற்பொழுது’.… Read More »