Monthly Archives: March 2021

திரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…

காண்பியக் கலையின் வீச்சு என்பது ரசிக்கும் மனநிலையைத் தாண்டி மிகக் கூர்மையாக மனதின் ஆழத்தில் பல சலனங்களை நிகழ்த்திவிடும். இன்றிருக்கும் கலைவடிவங்களில் திரைப்படம் என்ற கூட்டுக் கலைவடிவம் ஏற்படுத்தும் தாக்கம், மற்றைய கலைவடிவங்களில் இருந்து அதீத வீச்சுடன் பாயும் செழுமையான கலைவடிவமாக இருக்கின்றது. காட்சிகள் மூலம் அர்த்தங்களை கடத்துதல் என்பது மிக நேரிடையானது. ஒவ்வொரு பிராயத்திலும் நாம் பார்க்கும் திரைப்படங்கள் ரசனை மாற்றத்தில் பலதை நிகழ்த்தி வாழ்கையின் உட்கூறுகளில் நுணுக்கமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாம் சிந்திக்கும், செயல்படும்… Read More »

மாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்!

‘சாதியத்தின் இயல்பாக்கமும் டொமினிக் ஜீவாவின் அச்சமும்’ என்று  ராகவன் எழுதிய கட்டுரையில், என்னைப் பற்றி எழுதிய குறிப்புக்கு விளக்கம் எழுதலாம் என்று அக்கட்டுரையின் பின்னூட்டப் பெட்டியைத் தேடினால் அதனைக் காணவில்லை. அதனால் எனது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன். ராகவன் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, முரளி சண்முகவேலனை  ‘அறிவாக, நுணுக்கமாகப் பேசுகிறீர்கள் அதனால் பிராமணரா?’ என்று நான் கேட்டேன் என்பது. இதனை முற்றாக மறுக்கிறேன்.   2018  டிசம்பர் 08  அன்று “பரியேறும் பெருமாள்” திரைப்படம் சார்ந்து ‘தமிழ் மொழிச் செயற்பாட்டகம்’ ஒழுங்கமைத்த நிகழ்வின் போது முரளி சண்முகவேலன்  ‘மையமாகும் விளிம்புகள்’ என்ற தலைப்பில்  பேசவந்தார். இந்தக் கூட்டத்தில்   சபையில்… Read More »