Tag Archives: யாழ்.திரைப்பட வட்டம்

திரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…

காண்பியக் கலையின் வீச்சு என்பது ரசிக்கும் மனநிலையைத் தாண்டி மிகக் கூர்மையாக மனதின் ஆழத்தில் பல சலனங்களை நிகழ்த்திவிடும். இன்றிருக்கும் கலைவடிவங்களில் திரைப்படம் என்ற கூட்டுக் கலைவடிவம் ஏற்படுத்தும் தாக்கம், மற்றைய கலைவடிவங்களில் இருந்து அதீத வீச்சுடன் பாயும் செழுமையான கலைவடிவமாக இருக்கின்றது. காட்சிகள் மூலம் அர்த்தங்களை கடத்துதல் என்பது மிக நேரிடையானது. ஒவ்வொரு பிராயத்திலும் நாம் பார்க்கும் திரைப்படங்கள் ரசனை மாற்றத்தில் பலதை நிகழ்த்தி வாழ்கையின் உட்கூறுகளில் நுணுக்கமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாம் சிந்திக்கும், செயல்படும்… Read More »