Category Archives: இலக்கியம்

அஞ்சலி: தெளிவத்தை ஜோசப் (1934–2022)

தெளிவத்தை ஜோசப் அவர்களைக் குளிர் நிரம்பி வீசிய பின்னேரப் பொழுதொன்றில் மலையகத்தில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பில் முதன்முதலாகச் சந்தித்திருந்தேன். தன் வெண்ணிறத் தலைமுடியைச் சீராக அழுத்தி வாரி, கன்னங்களைச் சவரம் செய்து, மீசையைக் கச்சிதமாக நறுக்கிவிட்டுச் சட்டையை உட்செலுத்திய நேர்த்தியான தோற்றத்தில் சுறுசுறுப்பாகப் பேசியவாறு இருந்தார். அன்றைய நாளில் அவர் தலைமைதாங்கிய அரங்கில் உரையாற்றச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. முன்னர், அவர் எழுதிய ‘குடைநிழல்’ குறுநாவலை வாசித்துவிட்டு விரிவான குறிப்பொன்று எழுதியிருந்தேன்; அதையொட்டி அவருடன் தொலைபேசியில் பேசவும் இயன்றது.… Read More »

செவ்வந்திப்பூ: அனோஜனின் கட்டுடைப்பு -லலித்தாகோபன்

கலைமுகம் எழுபத்து மூன்றாவது இதழ் கிட்டியிருக்கிறது. இதில் அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களினால் எழுதப்பட்ட ‘செவ்வந்திப்பூ’ சிறுகதையினை படித்தேன்.ஏற்கனவே அனோஜன் அவர்களின் கதைகள் பலவற்றை இணையம் மற்றும் இலக்கிய இதழ்களில் படித்திருக்கிறேன். அவர் நல்லதோர் கதைசொல்லி.அனேகமான அவரின் கதைகளில் வரும் மரமொன்றில் “சிக்மென்ட் ப்ராயிட்” பதுங்கியிருப்பார்.அவரை கண்டு பிடித்து விளையாடும் கள்ளன் -பொலிஸ் விளையாட்டுக்களாக இந்த கதைகள் இருக்கும். முதலில் அனோஜனுக்கு நன்றி சொல்லணும். இதுவரையில் நான் செவ்வந்தி என நினைத்தது நம்மவூர் செம்பரத்தை பூவினையே.ஆக அது வேறு… Read More »

களங்கமின்மையின் பொலிவு : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதை ‘பொட்டு’ ஆக்காட்டி இதழில் ‘ரிஷான் ஷெரீப்’ மொழிபெயர்ப்பில் வெளிவந்த போது, அதனைப் படித்துவிட்டு தர்மு பிரசாத்துடன் சிறுகதை வடிவம் சார்ந்து நிறைய உரையாடியதாக நினைவு. நவீனத்துவ எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடிய பிசிரில்லாத கூர்மையான மொழிநடை மட்டுமன்றி, யதார்த்தவாத கதை சொல்லலில், அதீத சித்தரிப்பு நோக்கிச்செல்லும் போது நிகழும் அடர்த்தி குறைப்பு சார்ந்து, பொட்டு சிறுகதையூடாக தொலை தூரம் யோசிக்க முடிந்தது. அக்கதையின் கச்சிதம் அப்படி. வடிவக் கச்சிதம் கொடுக்கக்கூடிய கலையமைதிக்கும், கட்டற்ற சித்தரிப்பில் நிகழும்… Read More »

மோகனம் : சிறுகதை

  1 “ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன்.   “எஸ்…”   “நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச் செல்லும் தூய பிரித்தானிய உச்சரிப்பில் வார்த்தைகள் ஒலித்தன. பொலிஸ் என்றவுடன் என் உடல் என்னையும் மீறி சிறிதாக விழிப்புக் கொண்டது.   “சொல்லுங்கள்,”   “உங்கள் மகனது பெயர் செந்தூரன்தானே?”   “ ஆமாம்”   “உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. செந்தூரனும், அவரது… Read More »

இரண்டு சிறுகதைகள்

1 காலம் இதழில் ‘சிறில் அலெக்ஸ்’ ‘ஒரு ருமேனியனுடன் உரையாடுவது எப்படி?’ என்ற குறுங்கதையை இங்கிலாந்தை மையப்படுத்தி எழுதி இருக்கிறார். ருமேனியர்கள் என்றில்லாமல் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் ஐரோப்பியர்களும், ஏனையவர்களும் தான் அதிகமான உடல் உழைப்பு கூடிய வேலைகளைச் செய்கிறார்கள். தொழிற்சாலைகள், பண்ணைகள் என்று எங்கும் அவர்களைக் காணவியலும். பூர்விக ஆங்கிலேயர்கள் உடல் உழைப்பை அதிகம் கொடுக்க தயங்குபவர்களாக இருக்கிறார்கள். வருவாய் குறைந்தாலும் மாநகரசபை அடிப்படை செலவுகளைப் பொறுப்பு ஏற்கும் என்பதால் அதிகம் பொருளாதாரம் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. படையெடுக்கும்… Read More »

ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில்… Read More »

கள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா

தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு… Read More »

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான… Read More »

பிரித் நூலின் தரிசனம்

அனோஜன், யானை சிறுகதை வாசித்தேன். கடைசியிலுள்ள பிரித் நூலின் தரிசனம் திறப்பை அளித்தது. ஆங்கிலத்தில் மாற்றியதை இணைத்துள்ளேன்.   அன்புடன் சேது வேலுமணி சென்னை   பிரித் நூலைப் பற்றி மேலும் தகவல் தெரியப்படுத்தவும். நன்றி.  *** கடந்த காலத்தில் நாம் இருந்தோம். இப்போது அதில் இல்லை. எதிர்காலத்தில் நாம் இருக்கலாம். ஆனால் இந்தக் கணத்தில் அதிலும் இல்லை. நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறோம்; இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லை. அதோடு நிகழ்காலமும் இல்லை. நிகழ்காலம் என்பது நாம் உணர்ந்து… Read More »

பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்

1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும். புகலிட இலக்கியம் என்றால் என்ன? எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில்… Read More »