Monthly Archives: March 2022

செவ்வந்திப்பூ: அனோஜனின் கட்டுடைப்பு -லலித்தாகோபன்

கலைமுகம் எழுபத்து மூன்றாவது இதழ் கிட்டியிருக்கிறது. இதில் அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களினால் எழுதப்பட்ட ‘செவ்வந்திப்பூ’ சிறுகதையினை படித்தேன்.ஏற்கனவே அனோஜன் அவர்களின் கதைகள் பலவற்றை இணையம் மற்றும் இலக்கிய இதழ்களில் படித்திருக்கிறேன். அவர் நல்லதோர் கதைசொல்லி.அனேகமான அவரின் கதைகளில் வரும் மரமொன்றில் “சிக்மென்ட் ப்ராயிட்” பதுங்கியிருப்பார்.அவரை கண்டு பிடித்து விளையாடும் கள்ளன் -பொலிஸ் விளையாட்டுக்களாக இந்த கதைகள் இருக்கும். முதலில் அனோஜனுக்கு நன்றி சொல்லணும். இதுவரையில் நான் செவ்வந்தி என நினைத்தது நம்மவூர் செம்பரத்தை பூவினையே.ஆக அது வேறு… Read More »

களங்கமின்மையின் பொலிவு : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதை ‘பொட்டு’ ஆக்காட்டி இதழில் ‘ரிஷான் ஷெரீப்’ மொழிபெயர்ப்பில் வெளிவந்த போது, அதனைப் படித்துவிட்டு தர்மு பிரசாத்துடன் சிறுகதை வடிவம் சார்ந்து நிறைய உரையாடியதாக நினைவு. நவீனத்துவ எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடிய பிசிரில்லாத கூர்மையான மொழிநடை மட்டுமன்றி, யதார்த்தவாத கதை சொல்லலில், அதீத சித்தரிப்பு நோக்கிச்செல்லும் போது நிகழும் அடர்த்தி குறைப்பு சார்ந்து, பொட்டு சிறுகதையூடாக தொலை தூரம் யோசிக்க முடிந்தது. அக்கதையின் கச்சிதம் அப்படி. வடிவக் கச்சிதம் கொடுக்கக்கூடிய கலையமைதிக்கும், கட்டற்ற சித்தரிப்பில் நிகழும்… Read More »