Monthly Archives: April 2017

ஆண்மை – எஸ்.பொன்னுத்துரை – 13

எஸ்.பொவின் படைபுகலம் அகம் சார்ந்த நெருக்கடிகளைப் புறவயமான சித்தரிப்புகளுடன் சித்தரிப்பவை. காமம் சார்ந்த மன நுண்ணடுக்குகளில் ஒளிந்திருக்கும் அடியாழப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதுவதிலே எஸ்.பொ முனைப்பாக இருந்தார். தனிமனித பிரச்சினைகளும், அகச் சிக்கல்களுக்குமே பிரதான இடத்தைக் கொடுத்தார். இயல்பாக உயிரினங்களுக்கு இருக்கக்கூடிய காமத்தையும், அதனை மீறும் தருணங்களையும் கண்டு, மனித மனதை இயல்பாகவே ஒப்புவித்தார். காம உணர்வுகள் சார்ந்த குற்றவுணர்ச்சிகள் அவரின் படைப்புகளில் இருப்பதில்லை. அவரது கதைகளில் சித்தரிக்கப்படும் யாழ்ப்பாணத்து நிலம் என்பது, மிகுந்த நுண்மையான சித்தரிப்புக்களால்… Read More »

வாசனை – சிறுகதை

இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல் எழுந்து வந்து என் காலடியில் மோதி பொடிப்பொடியாக உதிர்ந்தது. அவன் தன் மனைவியை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக அழைப்பது மெலிதான சஞ்சலத்தைத் தந்தது. அவன் மனைவி தன் உறவினர் ஒருவரைப் பார்க்கப்போய்விட்டதாக நான் கேட்காமலே தொலைபேசியில் சொன்னான். ஹரிக்குச் சொல்லலாமா… Read More »

மீன்கள் – தெளிவத்தை ஜோசப் – 12

நாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும் அதுதான். பெரிய மீன் சின்ன மீனை உண்டு உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை போட்டிகொண்ட அவசரசகதி வாழ்வில் உருவாகிவருகிறது. உயிர்வாழ்தலின் போராட்டம் அத்தகைய உக்கிரம் கொண்டது. தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கும் சிறுகதைகளில் முதன்மையான சிறுகதை “மீன்கள்”.… Read More »

ஒரு பகற்பொழுது – நந்தினி சேவியர் – 11

உணவு,உடை,உறையுள் மூன்றும்தான் மனித வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது. இது தனியே மனிதர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றில்லை, மிருகங்களுக்கும் இதே உணவு,உறையுள் தான் உயிர்வாழத் தேவைப்படுகின்றன. அப்போது மனிதர்களுக்கும், மிருகத்துக்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகம் வரும் அல்லவா; மனிதர்கள் இதிலிருந்து நுண்மையாக வேறுபடுகிறார்கள். அன்பும் கருணையும், அறிதலும் தான் மிருகங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. உயிர்வாழ்வதையும் தாண்டி ஏதோவொன்று வாழ்கையில் இருக்கின்றது அல்லவா. நந்தினி சேவியர் எழுதிய சிறுகதையில் ஒன்று ‘ஒரு பகற்பொழுது’.… Read More »

அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

‘ஜூட்‘ சிறுகதை பற்றி ‘பிரிந்தன்’ எழுதிய மதிப்பீடு. சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி படர்ந்த மலைப்பிரதேசத்தின் ஊடாக கதை மாந்தர்கள் செல்லும் போது வாசர்கள் கண்களில்… Read More »

ஒரு றெயில் பயணம் – குப்பிழான் சண்முகன் – 10

மிகுந்த சிக்கலும், புதிரும், எதிர்பாராத திருப்பங்களும் நிகழும் வாழ்க்கையின் நகர்வின் தடுமாற்றத்தில் சிக்கியிருக்கும் போது, மனதுக்கு நெருக்கமானவர்களின் அணுக்கம் காரணமாகப் பல இடங்களில் வாழ்கையின் தருணங்கள் அழகாகத் தோன்றுகின்றன. வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ் துண்டை உள்ளங்கையில் வைத்திருப்பது போல் மிகுந்த குளிர்ச்சியான தருணங்கள் அவை. இது எதிர்பாலின் மீதும் வரலாம், சகபாலின் மீதும் வரலாம். அவை அன்பு, ஆறுதல் எனும் ஏக்கங்களின் சுழற்சியில் இயல்பாக எழக்கூடிய சுழிகள். எத்தனையோ நபர்களுடன் அதிகம் அளவளாவினாலும் சிலரை அகவயமான உணர்வுகளின்… Read More »

வெள்ளிப் பாதசரம் – இலங்கையர்கோன் – 09

கோவம் எழும் உந்துதல் கணம் சட்டென்று பெரும் விசையுடன் எழும்போது சுற்றியிருக்கும் அணைத்துத் தற்காலச் சூழலும் மறந்துபோகும். எமக்கு மிகப்பிடித்தவர்களைக் கூட மிகுந்த கோவத்துடன் எம் நிலை மறந்து சில இடங்களில் வசைச் சொற்களால் பேசியிருப்போம். அந்த இடங்களில் அவ்வாறு பாவனைச் செய்திருக்கக்கூடாது என்பது உறைக்கும்போது, எல்லாமே மாறியிருக்கும். மிக மனம் நோகடித்துப் புண்படுத்தியிருப்போம். அனைத்தும் தலைகீழாக உருமாறியிருக்கும். இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப் பாதசரம்’ சிறுகதை அவ்வாறான நெருக்கடி ஒன்றை கண்முன்னே சித்தரிக்கின்றது. மிகப் பிரமாண்டமாக நிகழும்… Read More »

பாத்திரம் – ஐ.சாந்தன் – 08

நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். அவை பிழைக்கும் போது கடுமையான மனச்சோர்வு சுற்றிப்பிடிக்கும். இந்த அழுத்தங்களில் இருந்து வெளியேற உள்மனம், முன்னம் எடுத்த முடிவு ஏன் பிழைத்தது? நான் எடுத்த முடிவு உண்மையில் பிழையா? தவறு நம்பக்கமா? ச்சே ச்சே இல்லை; என் பக்கம் அவ்வாறு இல்லை என்று ஓயாமல் அரற்றிச் சமாதானப்படுத்த காரணங்களைத் தேடும். அதே போல் ஏமாற்றப்படும்போதும் அந்த அவமானகரமான வலியில் இருந்து வெளியேற மனம் ஒரு காரணத்தைத்… Read More »

பொரிக்காத முட்டை – பவானி – 07

வெவ்வேறு நேர இக்கட்டுகளில், சமநிலை குலைந்திருக்கும் சமயத்தில் ஏற்படும் அழுத்தத்தில் எழும் பயங்கள் மிக எளிமையான காரணங்களில் உருவாகியவைகாய இருக்கும், அவ்வாறான அழுத்தங்கள் கரைந்து போனபின் இப்படியெல்லாம் சிந்தித்து பயந்தோமா என்று நகைச்சுவையாகவே திரும்பத் தோன்றலாம். இருந்தும் அழுத்தங்கள் உருவாகும் தருணங்களில் நாம் முற்றிலும் பிறிதொருவராகவே தோன்றுவோம். அழுத்த அலைகள் ஓயும் போதே சமநிலையும் யதார்த்தமும் எஞ்சும். பெண்களின் உள்ளம் கர்ப்பகாலத்தில் எப்போதுமே பிறக்கப்போகும் குழந்தை பற்றிய கனவுகளில் மிதக்கும். அச்சூழலில் அவர்களின் மனம் பல்வேறு அழுத்தங்களில்… Read More »

தோணி – வ.அ.இராசரத்தினம் – 06

சிறுவயதில் என்னவாக ஆக விரும்பினேன் என்று எனக்குள்ளே நான் கேட்கும் போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொன்றை விரும்பியிருந்தது நினைவுகளில் வருகின்றது. இருந்தும் ஏதோவொரு லட்சியம் ஆழமானதாக மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்துவிடுகிறது. வழி தவறியோ விரும்பியோ விரும்பாமலோ நாம் வேறொரு துறைக்குள் நுழைந்து அதிலே சுழன்று வாழ்ந்து எல்லாம் சரியாகச் செல்கிறது என்ற திருப்தியில் இருக்கும்போது திடீரென்று இது எனக்குரிய துறையில்லை; இது நான் விரும்பியதில்லை என்று தெரியவரும். நினைவுகளையும் ஏக்கங்களையும் பிசைந்து ஒருவிதமான மந்தமான மனநிலைக்கு… Read More »