Tag Archives: பெங்களூர்

மூன்றாம் நதி

தொடர்ச்சியாக இணையத்தில் வாசிப்பவர்களுக்கு வா.மணிகண்டனை தெரியாமல் இருப்பது ஆச்சர்யமிக்கதொன்றாகவே இருக்கும். நிசப்தம் வலைத்தளத்தில் சளைக்காமல் எழுதிக்கொண்டு இருப்பவர். அதே நேரத்தில் நிசப்தம் அறக்கட்டளை மூலம் எண்ணற்ற உதவிகளைத் தேவையானவர்களுக்குச் செய்துகொண்டிருப்பவர். தினமும் வலைத்தளத்தில் எழுதுவதற்கு அவருக்கு விடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். எப்படி எழுத்துப்பிழைகள் இல்லாமல் வேகவேகமாகத் தட்டச்சு செய்யது இணையத்தில் தினமும் இரண்டு மூன்று கட்டுரை என்று எழுத முடிகிறது என்று ஆர்ச்சர்யமகவே இருக்கும். கவிதைகள் எழுதுவதிலும் கவிதைகளுக்கு மதிப்பீடு எழுதுவதிலும் நிறையப் பக்கங்களைச் செலவழித்தவர். இவரது… Read More »