Tag Archives: இலக்கியம்

நிரூபா ஆயிலியதின் விமர்சனக் குறிப்புக்கான என் எதிர்வினை

அனோஜன் பாலகிஷ்ணனின் “அவள் அப்படித்தான் திரைப் படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்” என்கின்ற முகநூல் பதிவின் மீதான விமர்சனக் குறிப்பு. பெண்ணுக்கும் ஆணுக்குமிடையிலான வேறுபாடுகள் பால் ரீதியானதே.மாதவிடாய் மகற்பேறு போன்ற விடயங்கள் பெண்களின் உயிரியில் ரீதியான ஒரு செயற்பாடாக இருக்கின்றது. பெண்கள் இவ்விடயங்களைச் சாதாரணமாகக் கடந்து செல்லாமல் வெளிப்படுத்துவதும் எழுத்தில் பதிவிடுவதும் இவ் விடயங்களைப் பெரிதுபடுத்தி கழிவிரக்கம் உண்டுபண்ணி சலுகைகளை பெற்றுக்கொள்ள விளைவதாகும். இவ்வாறான செயல்கள் பெண்களை மேலும் ஒடுக்கும் நிலையிலேயே வைத்திருக்கும். பிரசவத்தின்போது பெண்கள் ஆண்… Read More »

மதிப்பீடுகளின் வீழ்ச்சி – ஈழத்து இலக்கிய விமர்சனப்போக்குகள் பற்றிய சில புரிதல்கள்

ஆகஸ்ட் மாதம் வெளியாகிய  தடம் மூன்றாவது இதழில் ஜெயமோகனின் நேர்காணல் குறித்தான விவாதங்களில் மிக அதிர்ச்சி தரக்கூடிய நிலைத்தகவல்கள் சிலவற்றை முகநூலில் கண்ணுற்றேன். ‘தமிழக இலக்கியவாதிகள் போனால் போகட்டும் என்று ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம் என்று ஓரிருவரை அங்கீகரித்தவர்கள், இன்று சயந்தன், குணா கவியழகன், யோ. கர்ணன், தமிழ்நதி என்று வெளிக்கிளம்பி வரும் படைப்பாளிகளை ஓர் ஒவ்வாமையோடு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு நன்கு தெரியும், இன்றைக்கு ஈழத்துப் படைப்பாளிகள் உருவாக்கக் கூடிய படைப்புகளை, அவை காட்டும் உலகத்தைத் தம்மால்… Read More »

தேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்!

பெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது என்று உற்றுப்பார்த்தால் அவளின் தாயாகவும் அவனைச் சார்ந்த பெண்களாகவும் இருப்பார்கள். பொதுவாக அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு மிகயியல்பானது. ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமானதும் அந்தரங்கமானதுமாக இருந்துவிடுவதுண்டு. ஆண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும், பெண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும் என்பதை மென்மையாகவும் கடுமையாகவும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதில் பெரும்பங்கை செலவழிப்பதது… Read More »