Category Archives: இலக்கியம்

மூன்று புத்தகங்கள்

1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும். உசுல.பி.விஜய சூரிய… Read More »

மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்

யதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »

மெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16

அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »

மதிப்பீடு – திருக்கோவில் கவியுகன் – 15

இருத்தலின் மீதான வெறுப்பு, வாழ்தலின் மீதான வெறுப்பு போன்றவை அகம் நோக்கிய சிந்தனையில் உதிப்பதாக இருக்கலாம். அது தன்னுடையை தனிப்பட்ட வாழ்வின் மீதான போக்கு அல்லது மற்றவர்களின் வாழ்கையின் துன்பத்தை அவதானிக்கும்போது வாழ்வின் பிடிப்பு மீது தோன்றும் வெறுப்புணர்வாக இருக்கும். இது ஏன் சிலருக்கு அதிகமாகத் தோன்றுகின்றது, சிலருக்குத் தோன்றுவதேயில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இதை உணர்ந்து இருப்பதே மெய்யாக இருக்கும். கடைசி மெல்லிய ஏக்கத்துடன் இவ்வகையான உணர்வுளைக் கடந்திருப்போம்.… Read More »

மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14

பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத்… Read More »

சதைகள் – சிறுகதைகள் : நோயல் நடேசனின் விமர்சனப் பதிவு

காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன் பரிசால் கடத்தப்படுகிறாள். ஓடிசியில்… Read More »

பட்ட விரட்டி – மீள்தலின் தத்தளிப்பு

குற்றவுணர்வுகளில் வீழ்வதும் அதிலிருந்து வெளியேறத் தவிப்பதும் மனித வாழ்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால், சுற்றிப்பிடிக்கும் குற்றவுணர்வுகளின் வீரியத்திற்கு ஏற்ப அதன் பாதிப்புகள் தொடரலாம். எனினும் குற்றவுணர்வு பிடிக்கப்பட்டவரின் மனதின் பலவீனம் அதன் விளிம்பு எல்லைகளை மாற்ற முயலலாம். சிறிய தவறுகளுக்குக்கூட அதிகம் வருந்தலாம். சிலர் பெரிய அநீதிகளுக்குக் கொஞ்சம் வருந்தலாம். சிலர் இறுதிக்காலங்களில் பலதை நினைத்து அதிகம் வருந்தலாம். அது தனிமனிதக் குணம் சார்ந்தது. செயலின்மையின் முடிவற்ற எல்லையில் நின்று தத்தளித்து வெளியேறிய பின் ஏற்படும் குற்றவுணர்வுகளில்… Read More »

ஆண்மை – எஸ்.பொன்னுத்துரை – 13

எஸ்.பொவின் படைபுகலம் அகம் சார்ந்த நெருக்கடிகளைப் புறவயமான சித்தரிப்புகளுடன் சித்தரிப்பவை. காமம் சார்ந்த மன நுண்ணடுக்குகளில் ஒளிந்திருக்கும் அடியாழப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதுவதிலே எஸ்.பொ முனைப்பாக இருந்தார். தனிமனித பிரச்சினைகளும், அகச் சிக்கல்களுக்குமே பிரதான இடத்தைக் கொடுத்தார். இயல்பாக உயிரினங்களுக்கு இருக்கக்கூடிய காமத்தையும், அதனை மீறும் தருணங்களையும் கண்டு, மனித மனதை இயல்பாகவே ஒப்புவித்தார். காம உணர்வுகள் சார்ந்த குற்றவுணர்ச்சிகள் அவரின் படைப்புகளில் இருப்பதில்லை. அவரது கதைகளில் சித்தரிக்கப்படும் யாழ்ப்பாணத்து நிலம் என்பது, மிகுந்த நுண்மையான சித்தரிப்புக்களால்… Read More »

வாசனை – சிறுகதை

இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல் எழுந்து வந்து என் காலடியில் மோதி பொடிப்பொடியாக உதிர்ந்தது. அவன் தன் மனைவியை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக அழைப்பது மெலிதான சஞ்சலத்தைத் தந்தது. அவன் மனைவி தன் உறவினர் ஒருவரைப் பார்க்கப்போய்விட்டதாக நான் கேட்காமலே தொலைபேசியில் சொன்னான். ஹரிக்குச் சொல்லலாமா… Read More »

மீன்கள் – தெளிவத்தை ஜோசப் – 12

நாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும் அதுதான். பெரிய மீன் சின்ன மீனை உண்டு உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை போட்டிகொண்ட அவசரசகதி வாழ்வில் உருவாகிவருகிறது. உயிர்வாழ்தலின் போராட்டம் அத்தகைய உக்கிரம் கொண்டது. தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கும் சிறுகதைகளில் முதன்மையான சிறுகதை “மீன்கள்”.… Read More »