Author Archives: அனோஜன் பாலகிருஷ்ணன்

பஞ்சபூதம்

பஞ்சபூதம் வெறும் 32 பக்கங்களில் சாஜித்தினால் எழுதப்பட்ட நாவல். இலங்கை தமிழ் இலக்கியப்பரப்பிலிருந்து வெளியாகும் நாவல்களின் வழமையான மரபார்ந்த கதையாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்கம் பஞ்சபூதம். சர்ரியலிசத் தன்மைக்கான கூறுகளை அதிகம் கொண்டிருக்கின்றது. இவ்வாறான வடிவ பரிசோதனைகள் இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் ஓரளவுக்கு ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டிருந்தாலும், நான் வாசித்தவரையில் யதார்த்தவாதத்திலிருந்து மீறி சர்ரியலிசமும் மேஜிக்கல் ரியலிசத்தின் கூறுகளையும் ஒருங்கே கொண்டு நாவல் வடிவில் எழுதப்பட்டதில் இதுவே இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் முதலாவதாக இருக்கவேண்டும். ஆழமான நித்திரையில்… Read More »

அடர் பனிக் குளிரின் பயங்கரம் – எவரெஸ்ட்

திரையனுபவம் நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையுச்சிக்குப் பயணிக்கும் பயணிகளின் உணர்வுபூர்வமான கதையினைக்கொண்ட ஆங்கிலக் கதைப்படம் எவரெஸ்ட். 1996 – இல் நடந்த திகிலூட்டக்கூடிய விபத்து ஒன்றின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படமாகப் படமாக்கியுள்ளார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வந்திறங்கியிருக்கும் குழுவின் அறிமுகத்தோடு திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் சிநேகமாக அறிமுகமாகிக் கொள்கிறார்கள். மிக உயரமாக எழுந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தை திறந்த விழிகளுடன், பரவசமாகப் பார்கிறார்கள். சில்லென்று குளிர் காற்று சீண்டுகின்றது. திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும்… Read More »

சிங்கிஸ் ஜத்மாத்தவ்வின் ஜமீலா – குறுநாவல்

ஜமீலா என்ற சோவியத் குறுநாவலை சமீபத்தில் கிடைத்த இடைவெளியில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் பல்வேறு கேள்விகளை மனதின் அடியாழத்தில் கொந்தளிக்க வைத்தவாரிருக்கின்றது. ஒழுக்க மீறல்கள் எகச்கமாக எமது பண்பாட்டில் நிகழும்போதும், அதனைக் கேள்வியுறும்போதும் ஏற்படும் மெல்லிய அதிர்ச்சிகள் அதிகம் எம்மை யோசிக்கவைப்பதில்லை. நாம் வகுத்துக்கொண்ட அறம், கூட்டுச்சமூகத்தில் சிலரால் மீறப்படும்போது அதற்கான காரணக் காரணியங்களைத் தகுந்த உளவியலோடு அணுகமுடிவதில்லை. வெறுப்பை அவர்கள் மேல் உமிழ்திவிட்டு நகர்ந்துவிடுகின்றது மனம். சமூகத்தில் அறம் தவறியவர்களாகக் கருதுபவர்களின் அவர்பக்க நியாயங்களை அவர்பக்கத்தில்… Read More »

பஷீரின் மதில்கள்

மலையாள எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவரான வைக்கம் முகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் நீண்ட காலம் தேடியது. மிகச் சமீபத்தில்தான் வாசிக்கக் கிடைத்தது. பொதுவாகவே மிகக்சிறிய பக்க எண்ணிக்கையைக் கொண்ட கதைகளை எழுதுவது பஷீரின் வழமை. மதில்கள் நாவல் வெறும் 39 பக்கங்களில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது. காலச்சுவட்டில் பஷீரின் படைப்புகள் அனைத்தும் குளச்சல் மு. யூசுப்பின் மொழிபெயர்ப்பில் தொடர்ச்சியாக வெளிவந்தது. ஆனால், மதில்கள் நாவலை சுகுமாரன் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ஏற்கனவே மதில்கள் நாவலை தமிழில் சுராவும்(சுந்தர ராமசாமி அல்ல)… Read More »

சேரநாட்டு விஜயம் -2

2 ராமின் அலுவகத்திலே மெய்மறந்து அதிகநேரம் செலவிட நேரிட்டதால், வசந்தகுமாரைச் சந்திக்கச்செல்ல இயலவில்லை. “டேய்.. 30 நிமிடம் கழிந்ததும் கண்ணைக் காட்டியிருக்கலாம்தானே..” என்று சயந்தன் சோமிதரனைக் கடிந்துகொண்டார். கடுப்பான சோமிதரன் “இப்ப காலைக்காட்டுவன். பேசாமல் இரு..” என்று கடிந்துகொண்டார். இரவு ஏழு மணிவாக்கில் இளவேனிலையும் நண்பர்களையும் சந்திப்பதாக இருந்தது. இப்பொழுதே ஒன்பது மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. இளவேனில் இரண்டொரு தடவை தொலைபேசியில் “பாஸ் எங்க இருக்கிறீங்க..?” என்று கேட்டார். “இதோ.. வீட்டுக்குப்போயிட்டு ஒரு டாக்சியைப் பிடிச்சு வர்றோம்” என்று… Read More »

சேரநாட்டு விஜயம்

01- கன்னிப் பயணம் காட்டுநாயக்கா விமானநிலையத்தை இதுவரை வெளியே நின்று வேடிக்கை பார்த்த சந்தர்பங்களே எனக்கு அமைந்திருந்தது. முதல் தடவையாக கடல்தாண்டி நாடு கடக்கப் போகின்றேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னிப் பயணம் நிகழவிருந்தது. முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லவேண்டும். 15.04.2016 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை ருத்திரதேவி புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டேன். கொட்டுவை போய்ச்சேர ஒன்றரை ஆகியிருந்தது. புதுவருடப்பிறப்பை ஒட்டிய விடுமுறையாக இருந்ததினால் கொட்டுவை வழமையான நெரிசலற்று வெறிச்சோடியிருந்தது. முதுகுப்பையையும், இழுத்துக்கொண்டு செல்லும்… Read More »

ஜூட் – சிறுகதை

வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு… Read More »

தாரே ஸமீன் பார்

விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சில படங்கள் மட்டுமே அதிஷ்டவசமாகப் பார்கக் கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான், 2007 இல் வெளிவந்த தாரே ஸமீன் பார். அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூகச் செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இப்படத்தின் குறுவட்டு கைக்குவந்தபோது எந்த நம்பிக்கையும் இன்றி – முன் எடுகோள்கள் எதுவும் இன்றி – பார்க்கத் தொடங்கினேன். வசதியான பொருளாதார நிலையினைக் கொண்ட குடும்பத்தில் – அப்பா,அம்மா,அண்ணாவோடு… Read More »

ஆதிரை – ஒரு பக்கப் பெண்களின் கண்ணீர்

ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரக்ஞை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும் மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க கதை சொல்லலாக சொல்வதிலே அதிகமான தரப்பினரிடம்… Read More »

சிறுவர்களுக்கான திரைப்படங்களும் மியாசகியும்

சிறுவர் சினிமா என்றால் சிறுவர்கள் நடிக்கும் சினிமா என்ற அபிப்பிராயம் நம்மில் பலருக்கு இருகின்றது. அது தவறான புரிதல். சிறுவர் சிறுவர்களுக்குரிய சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவை சிறுவர்களின் கனவுகளையும், கற்பனைகளையும் காட்சிப்படுத்தி அதன் வழியே அவர்களின் உலகம் எப்படித் தென்படுகிறது என்பதை வெளிப்படுத்தவேண்டும். சிறுவர்கள் உலகை புறவயமாகவும் அகவயமாகவும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், தங்களது ஆசைகள் அபிலாஷைகள் எவ்வாறு பெரியவர்களால் பாதிப்படைய வைக்கப்படுகின்றது என்பதை அவை தெளிவாக ஒப்பேற்ற வேண்டும். அவையே சிறுவர்… Read More »