Category Archives: அறிமுகம்

அஞ்சலி: தெளிவத்தை ஜோசப் (1934–2022)

தெளிவத்தை ஜோசப் அவர்களைக் குளிர் நிரம்பி வீசிய பின்னேரப் பொழுதொன்றில் மலையகத்தில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பில் முதன்முதலாகச் சந்தித்திருந்தேன். தன் வெண்ணிறத் தலைமுடியைச் சீராக அழுத்தி வாரி, கன்னங்களைச் சவரம் செய்து, மீசையைக் கச்சிதமாக நறுக்கிவிட்டுச் சட்டையை உட்செலுத்திய நேர்த்தியான தோற்றத்தில் சுறுசுறுப்பாகப் பேசியவாறு இருந்தார். அன்றைய நாளில் அவர் தலைமைதாங்கிய அரங்கில் உரையாற்றச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. முன்னர், அவர் எழுதிய ‘குடைநிழல்’ குறுநாவலை வாசித்துவிட்டு விரிவான குறிப்பொன்று எழுதியிருந்தேன்; அதையொட்டி அவருடன் தொலைபேசியில் பேசவும் இயன்றது.… Read More »

கள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா

தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு… Read More »

உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான… Read More »

பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்

1 இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும். புகலிட இலக்கியம் என்றால் என்ன? எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில்… Read More »

அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர்… Read More »

தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17

எனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »

மூன்று புத்தகங்கள்

1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும். உசுல.பி.விஜய சூரிய… Read More »

நியோகா

நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »

மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்

யதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »

மெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16

அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »