Monthly Archives: August 2016

தேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்!

பெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது என்று உற்றுப்பார்த்தால் அவளின் தாயாகவும் அவனைச் சார்ந்த பெண்களாகவும் இருப்பார்கள். பொதுவாக அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு மிகயியல்பானது. ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமானதும் அந்தரங்கமானதுமாக இருந்துவிடுவதுண்டு. ஆண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும், பெண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும் என்பதை மென்மையாகவும் கடுமையாகவும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதில் பெரும்பங்கை செலவழிப்பதது… Read More »

தலைமுறை கடந்த குறிப்பு

அனுபவக்குறிப்பு யாழ்.பொதுசன நூலகம் கச்சேரிக்கு முன்னுள்ள பரந்த கட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமாகியது. மகோகனி மரங்கள் சூழ, மிக அமைதியான சூழலில் நூலகம் இயங்கியது. அப்போது நான் சிறுவர் பகுதியில் அதிகநேரம் செலவழிப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒன்றை ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்துவார்கள். ஜுரசிக் பார்க் என்ற முதலாவது ஆங்கிலப்படத்தை நூலகத்தில் பார்த்த அனுபவம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. நிறையச் சிறுவர்களைப் போலவே சிறுவர் பகுதியிலுள்ள கொமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புத் தொடக்கத்தை எனக்கும் கொடுத்தது. மாயாவியின்… Read More »

கொல்வதெழுதல் 90 – அலைக்கழிப்பின் நாட்கள்

கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஆர்.எம்.நெளஸாத் எழுதிய புதினம் ‘கொல்வதெழுதல் 90’. போர்க்காலத்தில் சாதாரண கிராமத்து இசுலாமிய இளைஞன் ஒருவனின் கதை. தொண்ணூறுகளில் கதை நிகழ்கின்றது. நாலா பக்கமும் இடம்பெறும் இன முரண்பாடுகள், மிகச்சிறிய சமூகமான இசுலாமிய சமூகத்தை அழுத்திப்பிசைகிறது. இலங்கையில் வசிக்கும் இசுலாமிய சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகளையும், அச்சமூகத்தின் கடந்தகால வரலாறுகளையும் இலக்கியப் பதிவாக எழுதப்படுவதில்லை என்ற பரிதவிப்பு இசுலாமிய சமூகத்துக்கு தொடர்ச்சியாக இருந்துவருவதுண்டு. அப்பரிதவிப்பை ஓரளவுக்கு குறைத்துவைத்திருக்கின்ற படைப்பாக்கமாக கொல்வதெழுதல் 90 நாவலைக் கருதலாம். கிழக்கிலங்கையிலிருக்கும் பள்ளிமுனைக்கிராமம்தான்… Read More »