Category Archives: பயணம்

அலைதலும் எழுத்தும்

பொதுவாகத் தொண்ணூறுகளின் பின்னர் பிறந்தவர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள் என்ற கோட்டில் இருபிரிவாகப் பிரிக்கலாம். நான் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதியிலே வளர நேர்ந்தது. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் பட்டினம் இராணுவத்தின் நுழைவால் முற்றிலும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய ஐந்துலட்சம் மக்கள் யாழிலிருந்து வெளியாகி கொடிகாமத்தைத் தாண்டி வன்னிப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். ஒருவகையில் விடுதலைப்புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்ட இடம்பெயர்வு அது. அரியாலையில் வசித்த எங்கள்… Read More »

சேரநாட்டு விஜயம் -2

2 ராமின் அலுவகத்திலே மெய்மறந்து அதிகநேரம் செலவிட நேரிட்டதால், வசந்தகுமாரைச் சந்திக்கச்செல்ல இயலவில்லை. “டேய்.. 30 நிமிடம் கழிந்ததும் கண்ணைக் காட்டியிருக்கலாம்தானே..” என்று சயந்தன் சோமிதரனைக் கடிந்துகொண்டார். கடுப்பான சோமிதரன் “இப்ப காலைக்காட்டுவன். பேசாமல் இரு..” என்று கடிந்துகொண்டார். இரவு ஏழு மணிவாக்கில் இளவேனிலையும் நண்பர்களையும் சந்திப்பதாக இருந்தது. இப்பொழுதே ஒன்பது மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. இளவேனில் இரண்டொரு தடவை தொலைபேசியில் “பாஸ் எங்க இருக்கிறீங்க..?” என்று கேட்டார். “இதோ.. வீட்டுக்குப்போயிட்டு ஒரு டாக்சியைப் பிடிச்சு வர்றோம்” என்று… Read More »

சேரநாட்டு விஜயம்

01- கன்னிப் பயணம் காட்டுநாயக்கா விமானநிலையத்தை இதுவரை வெளியே நின்று வேடிக்கை பார்த்த சந்தர்பங்களே எனக்கு அமைந்திருந்தது. முதல் தடவையாக கடல்தாண்டி நாடு கடக்கப் போகின்றேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னிப் பயணம் நிகழவிருந்தது. முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லவேண்டும். 15.04.2016 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை ருத்திரதேவி புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டேன். கொட்டுவை போய்ச்சேர ஒன்றரை ஆகியிருந்தது. புதுவருடப்பிறப்பை ஒட்டிய விடுமுறையாக இருந்ததினால் கொட்டுவை வழமையான நெரிசலற்று வெறிச்சோடியிருந்தது. முதுகுப்பையையும், இழுத்துக்கொண்டு செல்லும்… Read More »