Category Archives: நூலகம்

அலைதலும் எழுத்தும்

பொதுவாகத் தொண்ணூறுகளின் பின்னர் பிறந்தவர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள் என்ற கோட்டில் இருபிரிவாகப் பிரிக்கலாம். நான் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதியிலே வளர நேர்ந்தது. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் பட்டினம் இராணுவத்தின் நுழைவால் முற்றிலும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய ஐந்துலட்சம் மக்கள் யாழிலிருந்து வெளியாகி கொடிகாமத்தைத் தாண்டி வன்னிப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். ஒருவகையில் விடுதலைப்புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்ட இடம்பெயர்வு அது. அரியாலையில் வசித்த எங்கள்… Read More »

தலைமுறை கடந்த குறிப்பு

அனுபவக்குறிப்பு யாழ்.பொதுசன நூலகம் கச்சேரிக்கு முன்னுள்ள பரந்த கட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமாகியது. மகோகனி மரங்கள் சூழ, மிக அமைதியான சூழலில் நூலகம் இயங்கியது. அப்போது நான் சிறுவர் பகுதியில் அதிகநேரம் செலவழிப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒன்றை ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்துவார்கள். ஜுரசிக் பார்க் என்ற முதலாவது ஆங்கிலப்படத்தை நூலகத்தில் பார்த்த அனுபவம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. நிறையச் சிறுவர்களைப் போலவே சிறுவர் பகுதியிலுள்ள கொமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புத் தொடக்கத்தை எனக்கும் கொடுத்தது. மாயாவியின்… Read More »