Monthly Archives: April 2017

கோட்டை – மு.தளையசிங்கம் – 05

அறங்களாக வகுத்துக்கொண்டதை மீறும் போது ஏற்படும் குற்றவுணர்வின் இடைஞ்சல்களைக் களைவது ஒரு சவால்தான். மீறல்களை எவ்வளவு விரைவாக நிகழ்த்த முனைந்தாலும் குற்றவுணர்வு வேகத்தடையை ஏற்படுத்தும். இந்தக் குற்றவுணர்வு என்பது வகுத்துக்கொண்ட அறங்களை நம்புவதிலும் பின்பற்றுவதிலுமுள்ள அதீத ஈடுபாட்டால் உருவாவது. வலிமையாக அறத்தை நம்பினாலும், சில இடங்களில் அதனை மீற அதை நம்பிய மனித மனம் துடிக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் நம்மவியலாத பாலியல் உறவுமுறைகள்கூடப் பல சமயம் செய்திகளாக அறிந்துகொள்ளும்போது அறங்களுக்கு நன்கு பழகிய மனிதமனம் திடுக்கிடுகிறது. இது… Read More »

சந்திரிகை – முனியப்பதாசன் – 04

எதிர்ப்பாலின் மீதான கவர்ச்சி ஏதோவொரு புள்ளியில் ஆரம்பித்தாலும், அதற்கு வயது வித்தியாசம் என்பதும் கிஞ்சித்தும் இருப்பதில்லை. மிகச்சிறிய வயதிலே நமக்கு அழகானவர்களாகத் தோன்றுபவர்களை வியந்து மெய்மறந்து பார்த்திருப்போம், ரசித்திருப்போம்; ஏதோவொரு கவர்ச்சியும் ஈர்ப்பும் உள்ளிர்த்துக் கொண்டேயிருக்கும். அந்த ஈர்ப்பு எந்தவித காமம் சார்ந்த கிளர்தலையும் நகர்த்தியிருக்காது. ஆனால், எம்மை அறியாமலே அதற்குரிய ரசாயன மாற்றங்களை உள்ளுக்குள் நிகழ்த்தியும் இருக்கலாம். ஒவ்வொரு வயது படிகளிலும், நெருக்கமான உறவு இன்னுமொருவருடன் இருக்கும்போதோ அல்லது இல்லாமல் இரும்கும்போதோ ஏற்படும். இவ்வாறான எதிர்ப்பாலின்… Read More »

மாற்றம் – சட்டநாதன் – 03

புனிதம் அற்ற உறவுகள் என்று நமது சமூகத்தில் ஒதுக்கப்ட்டு இழிவாகப் பார்க்கப்படும் ஒவ்வொரு உறவுகளுக்கும் தொடுப்புகளுக்குப் பின்பும் ஒவ்வொரு உணர்வு சார்ந்த நெகிழ்வான கூரிய காரணங்களும் இருக்கும். திருமணம் என்ற ஒழுக்கு இருவருக்கு இடையிலான அன்பையும்,நேசத்தையும்,உதவிகளையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும்; இருந்தும் இந்த ஒழுக்கில் சிறிய பகுதி தவறி அந்த இடைவெளி வளர அதை வேறொரு துண்டு நிரப்பிவிடலாம். இரண்டு அணுக்கள் இலத்திரன்களைப் பங்கிடுவது போல அது சட்டென்று நிகழ்ந்து விடலாம். மனித வாழ்க்கை என்பதே உடல்,உளம்… Read More »

ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02

ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் பதின்மவயதினர் அவர்கள் வாழும் சூழலில் ஒரு குழாமாகவோ நண்பர் வட்டமாகவோ ஆகிவிடுவார்கள். ஊரிலுள்ள சனசமூகநிலையங்களில் அந்த அந்தக் குழுக்கள் தனியே தமக்குள் விளையாடிக்கொண்டோ, அரட்டையடித்துக்கொண்டோ இருக்கும். அவர்களுக்குக்கிடையில் இருக்கும் நட்பும் உரையாடலும் புரிந்துணர்வும் மிக வலிமையானதாக இருக்கும். ஒத்த ரசனையோ,விளையாட்டோ ஏதோவொரு விடயம் அந்த நட்பு வட்டத்தின் ஆதார சுழற்சி மையமாக இருக்கும். அது அசாதாரணமானது; நீண்ட நாட்கள் அந்த வட்டத்தில் இருந்தாலும் ஒவ்வொரு தேவை நிமிர்த்தம் வெவ்வேறு வாழ்க்கைச்… Read More »

கோசலை – ரஞ்சகுமார் -01

அப்பாவிடம் இருந்து மகளுக்குக் கிடைக்கும் அன்பென்பது வெளிப்படையானது. அன்பு திகட்டும் பேச்சும் கருணை சொட்டும் விழிப்பரிமாற்றமும் நேரிடையாகவே அப்பாவிடமிருந்து மகளுக்குக் கிடைக்கும். ஆனால், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்பும் பாசமும் வெளிப்படையற்றது. கண்டிப்பும் சரி, கருணையும் சரி அம்மாவின் மூலமே அப்பா, மகனுக்குத் தெரிவிப்பதே எமது சூழலில் அதிகம் நிகழும் பொதுப்படையான உண்மை. அனேகமானவர்களின் வீட்டுச்சூழல் அப்படித்தானிருக்கின்றது. அதேபோல் அம்மாவுக்கும் மகனுக்குமேல் இருக்கும் அன்பும் வெளிப்படையானது. இருந்தும் இரண்டுக்கும் நுண்மையான வித்தியாசம் இருக்கின்றது. அம்மாவின் அன்பு தன்… Read More »