Daily Archives: 12th April 2017

பொரிக்காத முட்டை – பவானி – 07

வெவ்வேறு நேர இக்கட்டுகளில், சமநிலை குலைந்திருக்கும் சமயத்தில் ஏற்படும் அழுத்தத்தில் எழும் பயங்கள் மிக எளிமையான காரணங்களில் உருவாகியவைகாய இருக்கும், அவ்வாறான அழுத்தங்கள் கரைந்து போனபின் இப்படியெல்லாம் சிந்தித்து பயந்தோமா என்று நகைச்சுவையாகவே திரும்பத் தோன்றலாம். இருந்தும் அழுத்தங்கள் உருவாகும் தருணங்களில் நாம் முற்றிலும் பிறிதொருவராகவே தோன்றுவோம். அழுத்த அலைகள் ஓயும் போதே சமநிலையும் யதார்த்தமும் எஞ்சும். பெண்களின் உள்ளம் கர்ப்பகாலத்தில் எப்போதுமே பிறக்கப்போகும் குழந்தை பற்றிய கனவுகளில் மிதக்கும். அச்சூழலில் அவர்களின் மனம் பல்வேறு அழுத்தங்களில்… Read More »