Daily Archives: 10th April 2017

தோணி – வ.அ.இராசரத்தினம் – 06

சிறுவயதில் என்னவாக ஆக விரும்பினேன் என்று எனக்குள்ளே நான் கேட்கும் போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொன்றை விரும்பியிருந்தது நினைவுகளில் வருகின்றது. இருந்தும் ஏதோவொரு லட்சியம் ஆழமானதாக மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்துவிடுகிறது. வழி தவறியோ விரும்பியோ விரும்பாமலோ நாம் வேறொரு துறைக்குள் நுழைந்து அதிலே சுழன்று வாழ்ந்து எல்லாம் சரியாகச் செல்கிறது என்ற திருப்தியில் இருக்கும்போது திடீரென்று இது எனக்குரிய துறையில்லை; இது நான் விரும்பியதில்லை என்று தெரியவரும். நினைவுகளையும் ஏக்கங்களையும் பிசைந்து ஒருவிதமான மந்தமான மனநிலைக்கு… Read More »