Daily Archives: 10th June 2017

பட்ட விரட்டி – மீள்தலின் தத்தளிப்பு

குற்றவுணர்வுகளில் வீழ்வதும் அதிலிருந்து வெளியேறத் தவிப்பதும் மனித வாழ்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால், சுற்றிப்பிடிக்கும் குற்றவுணர்வுகளின் வீரியத்திற்கு ஏற்ப அதன் பாதிப்புகள் தொடரலாம். எனினும் குற்றவுணர்வு பிடிக்கப்பட்டவரின் மனதின் பலவீனம் அதன் விளிம்பு எல்லைகளை மாற்ற முயலலாம். சிறிய தவறுகளுக்குக்கூட அதிகம் வருந்தலாம். சிலர் பெரிய அநீதிகளுக்குக் கொஞ்சம் வருந்தலாம். சிலர் இறுதிக்காலங்களில் பலதை நினைத்து அதிகம் வருந்தலாம். அது தனிமனிதக் குணம் சார்ந்தது. செயலின்மையின் முடிவற்ற எல்லையில் நின்று தத்தளித்து வெளியேறிய பின் ஏற்படும் குற்றவுணர்வுகளில்… Read More »