Tag Archives: ஆட்டுப்பால் புட்டு

ஆட்டுப்பால் புட்டு – கைம்பொதி விளக்கு

“அமரிக்கக்காரி” என்ற சிறுகதையை ஒரு சஞ்சிகையில் வாசித்தபோது யார் இந்த அ.முத்துலிங்கம் என்று வியப்பாகவிருந்தது. இதற்கு முதல் அந்தப்பெயரைக் கேள்விப்பட்டது கிடையாது. அவர் ஓர் ஈழ தமிழ் எழுத்தாளர் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. இதற்கு முன் வாசித்த ஈழ எழுத்தாளர்கள் அவ்வாறான கசப்பான அனுபவத்தையே தந்திருந்தார்கள். ஈழ எழுத்தாளர்கள் மீது கட்டிவைத்த விம்பத்தை அப்போதுதான் கிரனைட் வீசித் தகர்த்தேன். அவர்களால் சிறுகதைகள் எழுத முடியும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தது அப்போதுதான். [ஷோபாசக்தி அப்போது அறிமுகமில்லை]… Read More »